Wednesday, March 18, 2009

பேரணியைக் குழப்ப முயன்று தோற்றுப் போன ஸ்ரீலங்கா அரசாங்கம்

கடந்த திங்கட்கிழமை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் புலம்பெயர் மக்களால் நடத்தப்பட்ட -சாவிலும் எழுவோம் - கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டு தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் இப் போராட்டம் அமைந்திருந்தது.
எனினும், இந்த உணர்வெழுச்சிப் போராட்டத்தைக் குழப்பும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட சில தமிழ் புல்லுருவிகள் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட முனைந்த போதும் அவை யாவும் தோல்வியில் முடிவடைந்தது.
இந் நிகழ்வின் போது, ஐ.நா. முன்றலில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

No comments:

Post a Comment