Thursday, June 3, 2010

தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது


ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறப் போகும் முதலாவது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரை கண்டு ரசிக்க ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்சாகத்துடன் தயாராகியுள்ளது. குறிப்பாக இனவெறியால் பாதிக்கப்பட்டு புண்பட்டுப் போன தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டித் தொடரை மிகவும் பெருமையான ஒன்றாக கருதுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறித்து போட்டி அமைப்புத் தலைவர் டேனி ஜோர்டான் கூறுகையில், 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீண்ட சிறைவாசத்திலிருந்து விடுதலையான பின்னர் இப்போதுதான் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை முழுமை பெறுகிறது.

நெல்சன் மண்டேலா விடுதலையானது முதல் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் இனவெறி விடுதலையானது இப்போது கால்பந்துப் போட்டியுடன் நிறைவடைகிறது.

இடையில் 1994ம் ஆண்டு முதலாவது பல்வேறு இனக்குழுக்கள் சுதந்திரமாக பங்கேற்ற தேர்தல் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இப்போது இன்னும் ஒரு முக்கியச் சம்பவமாக, வரலாற்று நிகழ்வாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.

மண்டேலா சிறையிலிருந்து வெளியே நடந்து வந்தபோது எதிர்கால தென் ஆப்பிரிக்கா எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் கற்பனை செய்து பார்த்தோம். இன்றும் உலக நாடுகளின் புகழ் பெற்ற கால்பந்து அணிகளும், அதன் வீரர்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் இங்கு வந்து குழுமியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இதுதான் உண்மையான விடுதலை என்று ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் கருதுகிறது. இதற்குத்தான் நாங்கள் கனவு கண்டு வந்தோம் என்றார் ஜோர்டான்.

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர்தான், தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடரை நடத்த தீவிரம் காட்டியவர்.

இதுகுறித்து பிளாட்டர் கூறுகையில், மனிதகுல வரலாற்றின் பக்கங்களில் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. விளையாட்டுலகில் மட்டுமல்லாமல், மனிதகுல வரலாற்றிலும் இது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் உலகக் கோப்பைப் போட்டி குறித்து பெரும் உற்சாகத்துடன் உள்ளார். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதலாவது உலகக் கால்பந்துப் போட்டி குறித்து அவர் கூறுகையில்,இதை நாங்கள் ஆப்பிரிக்க உலகக் கோப்பை என்றே கூறுகிறோம். அதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

இனவெறியால் பல காலமாக துண்டாடப்பட்டு பொலிவிழந்து கிடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பைப் போட்டி என்பது மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.

இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா பல்வேறு துறைகளில் சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. சீரான வளர்ச்சியுடன் கூடிய பொருளாதாரம், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் சிறப்பிடம், பல இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் ஆரோக்கியமான நல்லுறவு என பலவற்றைச் சொல்லலாம்.

தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து விளையாட்டு பிரபலமானது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில். 1879ம் ஆண்டு அங்கு முதலாவது அங்கீகரிக்கப்பட்ட கால்பந்து கிளப் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி என்பதாகும். அந்த அணியினர் ராணுவ குழுக்களுடன் மட்டுமே கால்பந்து ஆடி வந்தனர். மேலும் ஐரோப்பியர்களும், வெள்ளையர்களும் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

1882ம் ஆண்டில் நேடால் கால்பந்து சங்கம் தொடங்கப்பட்டது. இதில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் கன்ட்ரி, நேடால் வாஸ்ப்ஸ், டர்பன் ஆல்பா, உம்கனி ஸ்டார்ஸ் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர் பத்து கிளப்களாக தென் ஆப்பிரிக்காவில் கால்பந்து வளர்ச்சி பெற்றது.

1882ம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் தொடங்கப்பட்டது. பின்னர் அது கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா என பெயர் மாற்றப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா என்ற பெயரிலான தேசிய அணி முதல் முறையாக 1897ம் ஆண்டும் தொடர்ந்து 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேய கிளப் அணிகளுடன் நடந்த போட்டிகளில் மோதியது.

தென் அமெரிக்காவுக்கும் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சென்று போட்டிகளில் கலந்து கொண்டது. அப்போது படகு மூலமாக அட்லான்டிக் கடலில் சென்று இந்த அணி தென் அமெரிக்காவை அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்களுக்கு 9 வாரங்கள் பிடித்ததாம். முதலில் பிரேசிலிலும், பின்னர் உருகுவே, அர்ஜென்டினாவிலும் தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி விளையாடியது.

பியூனஸ்அயர்ஸில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது அந்த அணியின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி 1954ல் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போட்டிதான். பின்னர் தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறைக்கு உலக நாடுகள் இனவெறியைக் காரணம் காட்டி தடை விதித்து விட்டன.

இந்த நிலையில் 1959ம் ஆண்டு தொழில்முறைகால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகமானது. தேசிய கால்பந்து லீக் என்ற பெயரில் அது அமைந்தது. அதில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். ஆனால் அதில் ஒருகிளப் கூட இப்போது இல்லை.

இந்த 12 கிளப்களும் ஆடிய அனைத்துப் போட்டிகளுக்கும் பெரும் திரளான ரசிகர்கள் வந்தனர். 1970ம் ஆண்டுவரை இந்த கிளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

1971ம் ஆண்டு தேசிய தொழில்முறை கால்பந்து லீக் அமைப்பு உருவானது. அந்த அமைப்பின் சார்பில் நடந்த முதல் போட்டித் தொடரில் ஆர்லான்டோ பைரேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தற்போது இந்த அமைப்பு பிரீமியர் சாக்கர் லீக் என்ற பெயரில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தென் ஆப்பிரிக்க கால்பந்து சங்கம் உருவானது. இந்த அமைப்புதான் தேசியஅளவிலான கால்பந்து சங்கமாக உருவெடுத்தது. இந்த அமைப்புடன் கால்பந்து சங்கம், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க கால்பந்து கழகம், தென் ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், தென் ஆப்பிரிக்க தேசிய கால்பந்து சங்கம் ஆகியவை இணைந்தன.

1992ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளன உறுப்பினராக முன்னேற்றம் கண்டது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் மீண்டும் உலக கால்பந்து விளையாட்டு அரங்கில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா.

அதன் பின்னர் தனது கடும் உழைப்பால், 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்றது தென் ஆப்பிரிக்கா. தொடர்ந்து 2002 உலகக்கோப்பை போட்டியிலும் இடம் பெற்றது.

தற்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் மிகப் பெரிய பெருமையைப் பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

எனவேதான் இந்த உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்காவின் பெருமையாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் பெருமையாகவும், கெளரவமாகவும் ஆப்பிரிக்கர்கள் கருதுகின்றனர்.

Thursday, April 1, 2010

Douglas Devananda intimidates Yarl Thinakural editor, manager in Jaffna

Douglas Devananda, a minister in Mahinda Rajapaksa's cabinet and the leader of the paramilitary-cum-political party Eelam People’s Democratic Party (EPDP), has publicly warned the editor of Yarl Thinakural K. Vamathevan and its administrative manager A. Nadarajah for having published front page news on the attack on Sri Lanka Freedom Party (SLFP) candidate Ankajan, stating that the reporting has negatively affected election propaganda for his party besides damaging his reputation. Douglas Devananda openly threatened that Vamathevan and Nadarajah will not be able to go for work Friday if they fail to apologize to him at a press meet he held for the local media in Jaffna Srithar Theatre Thursday morning. The open threat by Devananda to the lives of the news editor and the reputed manager of the Jaffna daily has created fear and panic among the media persons in Jaffna peninsula.

The threat to media persons Thursday comes on the day President Mahinda Rajapaksa visits Jaffna to engage in election propaganda.

Minister Douglas Devananda further accused Yarl Thinakural editor and administrative manager for "purposely misreporting" the Thursday early morning attack and claimed that it was SLFP candidate Ankajan’s group that had opened fire on and burnt the vehicle of Jaffna Mayor Ms. Patkunam Yogeswary.

The EPDP leader further instructed Yarl Thinakural editor to publish his version of the attack in Friday Yarl Thinakural.

Besides, during the press meet Minister Douglas Devanada phoned the owner of Colombo Thinakural daily Samy and its chief editor Thanabalasingham and spoke to them with the phone speaker on so that the attendees of the press meet could hear the conversation.

Editor Thanabalasingham and owner Samy said that they knew nothing about the said news coverage and added that Yarl Thinakural has been "infiltrated by persons who act on their own".

They further requested Douglas Devananda to "summon the persons involved to Srithar Theatre and warn them", the sources said.

This has caused shock and fear among the media persons in Jaffna and Colombo.

Conflict and clashes between the SFLP candidates and EPDP candidates contesting Jaffna electorate have begun to surface frequently in Jaffna peninsula.

Douglas Devananda, who is allocated 8 seats by the Colombo Establishment, has become increasingly intolerant to the campaign by the SLFP that is contesting with 4 seat allocation. Basil Rajapaksa is actively promoting the SLFP candidates.

Wednesday, March 31, 2010

புங்குடுதீவு பெண்களின் குடுமி சண்டையால் அதிர்ந்து போன சுவிஸ் பொலிஸ் : திருமண விழாவில் சம்பவம்

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்து விட்டது. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குடும்ப சண்டையிலிருந்து, பிரதேசம், குழு, ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள், நானா, நீயா பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள் பேசி, கங்கணம் கட்டிக் கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் போது வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த சண்டைகள் அடுத்த சந்ததிவரை தொடரும் போல் உள்ளது. சுவிஸ் நாட்டில் ‘அறோ” கன்ரோன் என்ற இடத்தில் புங்குடுதீவு மக்களின் கல்யாணவீட்டு நிகழ்ச்சியொன்றில்; நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே சரித்திரத்தில் சந்தித்திருக்க மாட்டார்கள். கிட்டதட்ட 60க்கு மேற்பட்ட பொலிசாரும், 3அம்புலன்சு வண்டிகளும் சுவிஸ் பத்திரிகை நிருபர்களும் அங்கு நடந்த சண்டையில் பிரசன்னமாகியிருந்தார்கள் என்றால் நீங்களே கற்பணை பண்ணி பாருங்கள் இந்த சண்டையானது எப்படி நடந்திருக்கும் என்று..

புங்குடுதீவை சேர்ந்த, அதுவும் ஒரே சொந்தக்காரக் குடும்பத்தை சேர்ந்த இரு வீட்டாரின் கல்யாணவீட்டு நிகழ்சியில் தான் இந்த கைகலப்பு நடந்திருக்கிறது. முன்பு 83,85களில் சுவிஸில் புங்குடுதீவார்; யாழ்பாணத்தார் என்று சண்டை பிடித்தார்கள். பின்பு படிப்படியாக கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி என்று வந்தவுடன் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுமட்டும் காரணமல்ல அன்றைய நேரத்தில் சுவிஸ் பொலிசாரின் கட்டுப்பாடுகள் மிகவும் சாந்தமாக இருந்தது ஆனால் இன்றோ அயல் நாட்டவரின் மீது சுவிஸ் பொலிசாரின் சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டுள்ளதால் நம்மவர்கள் இப்பொழுது அடக்கி வாசிக்கிறார்கள்.

இப்ப நமது நாட்டில சண்டை முடிந்து போனதால அதன் தொடர்ச்சியாக இங்கே தொடங்கி விட்டார்கள் போல்தான் தென்படுகிறது. நேற்றைய தினம் நடந்த சண்டையானது சிங்களவனுக்கோ தமிழனுக்கோ அல்லது யூகோகாரர்களிற்கும் இடையில் நடந்த சண்டையல்ல. ஒரே ஊர்காரர்களிற்கிடையில் (புங்குடுதீவு) ஒரே வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அதுவும் சொந்தகாரர்களின் கல்யாண வீட்டில் கலந்து கொள்ள வந்த ஒரே சகோதர குடும்பத்தை சேர்ந்தவர்களிற்கிடையில் நடந்த சண்டையாகும்.

நோர்மலாக கல்யாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் வீடு போன்ற நிகழ்சிகளில் ஆம்பிளைகள் நல்லா குடித்து போட்டு அவர்களின் வீரத்தை காட்டுவார்கள் அது வழமையானது தான். இப்பொழுதெல்லாம் கல்யாணவீடு போன்ற நிகழ்சிகளிற்கு குடிப்பதற்கு யூஸ் போத்தில் வாங்குவதை விட விஸ்கி போத்தில்கள் தான் கூடுதலாக வாங்குகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சண்டையோ ‘மது” போதையால் வந்த சண்டையல்ல மாறாக ‘மாதுக்களால்” வந்த சண்டையாகும். இந்த சண்டையோ மிகவும் சுவாரிசமான சண்டையாகும். ஏன்எனில் அங்கு நின்ற ஆம்பிளைகளும் ஆம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம், பொம்பிளைகளும் பொம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம். இதில் என்ன விசேசமான விடயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் பொம்பிளைகளும் பொம்பிளைகளுக்கும் இடையில் நடந்த சண்டை வெறும் வாய் சண்டையல்ல. பொம்பிளைகள் முதலில் கடும் சுத்தமான (தூசணம்) நல்ல தமிழில் வாய் சண்டையை தொடங்கினவையாம் தீடீரென கைகலப்புக்கு மாறி, கட்டியிருந்த சாறிகளையும் ஆளுக்கு ஆள் பிடித்து இழுத்து நின்று அடிபட்டவையாம். அங்கு நின்றிருந்த அமைதியான பெண்கள் (நூற்றுக்கு மேற்பட்ட), இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளும் மிகவும் பயந்து போய் யாபேரும் ஐயோ, ஐயோ எனக் குளறிக் கூக்கிரலிட்டு ஓரே நேரத்தில் பொலிசுக்கு ரெலிபோன் செய்தார்களாம்.

கல்யாணவீட்டு மண்டபத்துக்கு பக்கத்திலிருந்த சிறிய பொலிஸ் நிலையத்தார் ஓரேநேரத்தில் இவ்வளவுபேர் அழுதுகுளறி ரெலிபோன் செய்ததால் அவர்கள் சரியாக பயந்துபோய் அந்த மாநிலம் முழுவதும் தகவல் அனுப்பி கிட்டதட்ட 10-20 கார்களில் கல்யாண மண்டபம் நோக்கி விரைந்து வந்துதானாம் கலவரத்தை அடக்கியவர்கள்.

பொம்பிளைகள் போட்ட சண்டையை (அந்த கண்கொள்ளா காட்சியை) கலகம் அடக்க வந்த பொலிஸ்காரர்களோ கண்டு அதிசயத்து போனாங்களாம். பொலிசார் வந்த பிறகும் பெண்டுகள் சண்டையை நிறுத்தவில்லையாம். சில பொம்பிளையளை பொலிஸ்காரர் அவர்களின் கைகளை பின்னால் பிடித்து கைவிலங்கு போட்டு ஒரு மூலையில் கொண்டு போய் கடுமையாக எச்சரிகை செய்து இருத்திய பிறகுதானாம் பொம்பிளைகளின் சண்டை அடங்கியது. சுவிஸில் முதல்முறையாக தமிழ் பெண்களுக்கு பொலிசார் கைவிலங்கு போட்டதை இந்த நிகழ்ச்சியில் தானாம் பார்தவர்களாம் என அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள். நிறைய ஆம்பிளைகளையும் கைவிலங்கு போட்டு பொலிசார் கொண்டு போனவங்களாம்.

மாப்பிளையும், பொம்பிளையும் போட்டிருந்த மாலைகளையும் கழட்டி எறிந்துவிட்டு காரில் ஏறி போய் விட்டார்களாம். நல்ல காலம் இந்த சண்டை கல்யாணவீட்டு நிகழ்ச்சி இடையில் நடக்கும் போது தொடங்கியிருக்கிறது. அல்லாவிட்டால் மொய் கொடுக்கிற கட்டத்தில் நடந்திருந்தால் யாராவது மொய்பெட்டியை அடித்துகொண்டு போயிருப்பாங்கள்.

அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சில ஊர்காரர்களை நாம் விசாரித்த போது தெரிந்து கொண்டவைகள்….

புங்குடுதீவு மக்கள் சுவிஸில் நிறையபேர் வாழ்கிறார்;கள். 30வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் எங்கள் ஊர்காரர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும், ஒவ்வொரு சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் புங்குடுதீவு மக்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றுதான் முதல்முதலாக இப்படியொரு சண்டையை பார்தோம் என்கிறார்கள். ஆண்கள் யாராவது சண்டை பிடித்திருந்தால் அவர்களை நாங்கள் மண்டபத்துக்கு வெளியில் கொண்டுபோய் விட்டிருப்போம். இந்த நாகரிக வளர்ச்சியடையாத, படிப்பறிவில்லாத சிலபெண்கள் சண்டை பிடித்ததால் தான் இவ்வளவுதூரம் பிரச்சினை வந்தது.

பாருங்கள்! எவ்வளவோ காசு செலவழித்து, அழைப்பிதல் அடித்து, ஊருக்கு எல்லாம் ‘காட்” கொடுத்து, எவ்வளவோ ஒழுங்குகள் செய்து கல்யாணம் செய்வது என்பது வாழ்வில் ஒருமுறை தான். இந்த சுவிஸ் நாட்டில் இருந்து இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்தால் முழு புங்குடுதீவு மக்களுக்கும் அவமானம் என அங்கு நின்ற பலர் பேசி கொண்டிருந்தார்கள்.