Sunday, November 29, 2009

பாதுகாப்பு செயலாளரின் உத்தரவை அடுத்தே நான் விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களை கொன்றேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி என அறிவித்தல் வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

வன்னிப் போரின்போது நடந்த யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு அழைத்தபோது தப்பினால் போதும் என ஓடிவந்த சரத் இப்போது ஒரு பத்திரிகையாளரிடம் கூறுபவற்றை அங்கு அமெரிக்காவிடம் கூறியிருக்கலாமே. இதை இலங்கை பத்திரிகையில் கூறி என்ன பயன். எல்லாப் பழியையும் கோத்தபாயமேல் போட்டு சரத் தான் தப்பிக்கப் பார்க்கிறார். சிங்கள இனத்தவரிடையே தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதற்காக சில கசப்பான உண்மைகள் சில விரைவில் வெளியாகும்.

என்ன தான் எதிரியாக இருந்தாலும் சரத் கோத்தபாயவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கவில்லை, ஆனால் சில தமிழர்களோ என்ன செய்தாவது அரசுடன் ஒடியிருக்கவும், மகிந்தவைக் கட்டி அணைக்கவும் காத்திருக்கின்றனர். எப்போது திருந்தப்போகிறார்கள் இவர்கள்.

Thursday, November 26, 2009

சீமான் கனடாவில் வைத்து கைது


தமிழின உணர்வாளர் சீமான் அவர்கள் கனடாவில் வைத்து கனடியப் பொலிசாரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யபட்டுள்ளார். இச் செய்தியை கனடியப் பொலிசார் உறுதிசெய்துள்ளனர். எதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரத்தை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர்.

கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான்,


பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

Sunday, November 15, 2009

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார்



தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

வன்னிக் காட்டில் கனரக ஆயுதம் தாங்கிய புலிகள்

கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் ,வன்னியில் கொல்லப்பட்ட 25,000 மக்களைப் பற்றி எதுவும் கூறாது, அங்கு நடந்த மனிதப்பேரவலைத்தை, விவரிக்காது மற்றும் புதை குளிகளைப் பற்றிப் பேசாது, விடுதலைப் புலிகள் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இலங்கை இராணுவம் தாம் முல்லைத்தீவு பொது வைத்தியசலையை சரமாரியாகத் தாக்கியதாகவும் ஒப்புக்கொள்கிறது, இருப்பினும் அங்கு விடுதலைப் புலிகள் இருந்ததால் தாக்கினோம் என நியாப்படுத்த முயல்கின்றனர்.

இறுதிக்கட்டப் போரின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சிறிலங்கா அரசின் செல்வீச்சால் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வந்த போதும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. பி.பி.சி, சி.என்.என் மற்றும் அல்ஜசிரா போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு, தாம் அப்பகுதியில் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என இலங்கை அரசு அப்பட்டமான பொய் கூறியது. அதற்க்கு ஒருபடி மேல்போய் விடுதலைப் புலிகளே மருத்துவமனைகளை தாக்குகின்றனர் என்றார் கோத்தபாய.

அந்தப் பிராந்தியத்தில் வைத்தியசாலைகளே இல்லை என்றும் அது கூறியிருந்தது. புலம் பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களும் அதனைப் புலிகளின் பிரச்சாரம் என்றே கூறி வந்தனர். எனினும் இந்த வீடியோவில் அது முழுமையாகச் செல்வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

புலிகள் இப்பகுதியிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாலேயே சிறிலங்கா அரசாங்கமும் வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தியதாக தமக்குச் சொல்லப்பட்டது என்கிறார் இந்த ஊடகவியலாளர். அவர் இராணுவ உயரதிகாரியை மேற்கோள் காட்டி குரிப்பிட்டுள்ளார்.

கோர வெறி பிடித்த சிங்கள அரசு, தற்போது புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து, அவர்கள் ஆதரவில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு தரம்கெட்ட ஊடகங்களைப் பயன்படுதிவருகின்றது.

Monday, November 9, 2009

சரத் பொன்சேக்கா ஜனாதிபதியானால் நாம் இருவரும் சிறைவைக்கப்படுவோம் என மகிந்த ராஜபக்~ ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவுரை

ஜெனரல் சரத் பொன்சேக்கா ஜனாதிபதியானால் தன்னையும் ரணில் விக்ரமசிங்கவையும் 24 மணி நேரத்திற்குள் சிறையில் அடைத்துவிடுவார் எனவும் இந்த நிலைமையை நன்கு உணர்ந்து செயற்படுவது ஜனநாயக இருப்பிற்கு முக்கியமானது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ இடைத்தரகர் ஒருவர் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார். இந்த இடைத்தரகர், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட நண்பராவார். ரணில் நேற்று வெளிநாடு செல்ல முன்னர் இந்தத் தகவலை அந்த நபர் வழங்கியுள்ளார்.

தன்னுடன் எவ்வாறான மோதல்கள் இருந்த போதிலும், சரத் பொன்சேக்காவிற்கு இராணுவ அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி இடைத் தரகர் மூலம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்க்கட்சித்

தலைவர் நாடு திரும்பியதும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படுவது கொலைக்கார, சர்வாதிகார நிர்வாகம் இல்லையா என ஜனாதிபதியின் தகவலைத் தெரிவித்த நண்பரிடம் கேட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அழைப்பையும் நிராகரிக்கவில்லை.

Sunday, November 8, 2009

உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்துக் கூறியவர்கள் - வேல்ஸிலிருந்து அருஷ்


புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவு ஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன் றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசி யாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.


இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள்.
அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படகுகள் இந்தோனேசிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு படகு 39 பேருடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த போதும் அது கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மூவரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

27 பேர் உயிர்தப்பியுள்ளனர். கனடாவை நோக்கி சென்ற "ஓஷன் லேடி' என்ற கப்பலில் இருந்த 76 பேரையும் உள்வாங்கிக் கொள் வது தொடர்பில் கனேடிய அரசு பல வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து வருகின்றது. கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் கடந்த மாதம் 17 ஆம் திகதி கனடாவின் கடற்பரப்பை சென்றடைந்திருந் தது.

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று தற்போது அவுஸ்திரேலிய அரசின் கப்பலான "ஓஷானிக் விக்கிங்' கப்பலில் வைக்கப்பட் டுள்ள 78 பேரும் தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரி க்கையை முன்வைத்து போராடி வருகின் றனர்.

இந்த மக்களின் அரசியல் தஞ்சங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண் டும் எனவும் இந்த மக்கள் இலங்கையில் நடைபெற்ற போரில் தப்பியவர்கள் எனவும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப் புகள் தெரிவித்துள்ளன.
போர் நிறைவுபெற்று விட்டது என இல ங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் பெருமளவான ஈழத் தமிழ் மக்கள் அரசியல் அடைக்கலம் கோரி உயிரைப் பணயம் வைத்து பல ஆயிரம் மைல் கடந்து பயணம் செய்தமை உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட் பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற் போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லா தளவிற்கு சில வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது.

இந்த மக்களின் பயணம் உலகிற்கு ஒரு செய்தியை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. அதாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரி மைகளும், அடிப்படை உரிமைகளும் பாது காக்கப்படும் வரையிலும், அவர்கள் இலங் கையில் பாதுகாப்பாக வாழலாம் என தாம் எண்ணும் வரையிலும் உரிமைக்கான போர் என்ற நிகழ்வுகள் அங்கு அடங்கி விட்டதாக யாரும் கருத முடியாது.
அது ஏதோ ஒரு வகையில் தொட ரவே செய்கின்றது. மேலும் போர் அங்கு எவ்வாறு முடிவடைந்தது என்ப தையும், அதன் பின்னர் தமிழ் மக்க ளின் எதிர்காலம் என்பது என்ன? என் பது தொடர்பான தகவல்களையும் இந்த மக்களின் பயணம் தெளிவாக புரியவைத்திருக்கும்.

இது தொடர்பில் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணை யத்தளம் ஒன்றிற்கு நேர்காணலை வழங்கிய ஊடகவியலாளரும், ஆய் வாளருமான பரணி கிருஷ்ணரஜனி தெரிவித்த கருத்தையும் இங்கு கூறு வது பொருத்தமானது.
"யார் என்ன வியாக்கியானம் கூறி னாலும் புகலிடத்தஞ்சம் கோரியிருப்ப வர்களுக்கு இருக்கிற ஒரே அடை யாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்' என்பதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

போரில் குரூரமாகத் தோற்கடிக்கப்பட்டவர் களாக தமது அடையாள நிலத்தை இழந்த வர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர் களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக் கிறது' என தெரிவித்துள்ளார்.

அதாவது, இலங்கையில் போர் நிறைவு பெற்றாலும் அங்கு எல்லா இனமும் சமத் துவமான அரசியல் உரிமைகளையும், அதி காரங்களையும் கொண்டிருந்தால் மட் டுமே அமைதி ஏற்படும் என்ற வாதமும் இதன் மூலம் வலுப்பட்டுள்ளது.
போரின் நிறைவுடன் உலகம் மறந்து போக முற்பட்ட ஒரு உண்மையை இந்த அப்பாவி மக்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட பயணம் மீண்டும் தூசுதட்டி உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இலங்கையில் போரின் பின்னான நிகழ்வுகளில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் இழந்து போன மனித உரிமைகள் தொடர்பாகவும் மேற்குலகம் சில நகர்வு களை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், ஆசியாவின் மிகப்பெரும் ஜன நாயக நாடாகத் தன்னைத்தானே பிரகட னப்படுத்தியுள்ள இந்தியா மௌனமா கவே இருந்து வருகின்றது.

இந்த வருடத்தின் முற்பகுதியான மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலு மான மூன்று மாத காலப்பகுதியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருந்த மக்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர் என உலகிற்கு அறிவித்து வந்த இந்திய மத்திய அரசும், சில மேற்குலக நாடுகளும் கடந்த ஆறு மாதங்களாக 300,000 மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செயல்திறன் இன்றி உள்ளன.

அழுத்தங்களின் ஊடாக இந்த மக்களின் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அழுத்த மிரட் டல்களும், அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்ற விசாரணை கள் தொடர்பான மிரட்டல்களும் ஓரளவு பலனைக் கொடுத்துள்ளன.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை நிறுத்தப்படும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையும், அமெரிக்கா வின் வெளியுறவு திணைக்களம் அதன் காங் கிரஸ் சபையில் சமர்ப்பித்த இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான அறிக்கை யும் இலங்கைக்கு ஓரளவு அழுத்தத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்த அழுத்தங்களில் இருந்து தப்புவதற் காக இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கை களை அவசர அவசரமாக மேற்கொண்டு வருகின்றது.

எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக் களை முற்றாக மீளக்குடியமர்த்துவதுடன், 20 வருடகாலம் சிறைத்தண்டனை விதி க்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் விடு தலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப் பிய ஒன்றியத்தின் முன்நிபந்தனைகளில் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியத் தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.

ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதுடன் மட்டும் ஈழத்தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவ தில்லை. அவர்களின் அரசியல் பிரச்சினை கள் தீர்க்கப்படும் வரையிலும் உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல் தஞ் சம் கோரும் ஈழத்தமிழ் மக்களின் பயணங் கள் ஓய்ந்துவிடப்போவதில்லை.