Thursday, December 31, 2009

புலிகளின் பாப்பா எழிலன் பெண்போராளி தலை ஆட்டிகளாய் வான்தளத்தில் மக்கள் கிலி

கட்டு நாயக்க வான்தளத்தில் முன்னாள் விடுதலை புலிகளின்
விளையாட்டுத்துறை பொறுப்பாளராகவிருந்த பாப்பா மற்றும் திருமலை மாவட்ட அரசியல் துறை
பொறுப்பாளர் எழிலன் மற்றும் முக்கிய பெண் போராளி ஒருவர் இலங்கை கட்டு நாயக்கா வான்தளத்தில் புலிகளை அவர் தம்
ஆதரவாளர்களை அடையாளம் காணும் முகமாக கட்டு நாயக்க வான்தளத்தில் தலை அட்டிகாளாய் நிற்பதாக அவ்வழி பயணம் செய்த பயணிகள் சிலர்
தெரிவித்துள்ளனர் .

இதானால் மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்

வவுனியா நலன் புரி நிலையத்தில் பலர் கைதாவதற்கு இவரே காரணமாய் இருந்தவர் என அங்கு தங்கி நின்ற மக்கள் பலர்
எமக்கு தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது .

கட்டு நாயக்காவில் பலர் கைதானதிட்கு காரண மாய் இருந்தது இவர்கள் தான் என தற்போது கண்டறிய பட்டுள்ளது

அன்னை மரியின் உருவப்படத்திலிருந்து கைகள் இரண்டு







2006ம் ஆண்டளவில் புனித மடுதேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை புத்தகத்தை வாங்கியுள்ளனர். தொடர்ச்சியாக செய்துவந்த புனிதமான பிரார்த்தனையே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். திருமலை என்.சீ வீதியிலுள்ள மரிய அன்னை ஆலயத்திலுள்ள படத்திலும் யாழ். ஆனைக்கோட்டை வராளி கோவிலடியிலுள்ள வீடு ஒன்றிலும் இதேபோன்ற சம்பவம் அண்மையில் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 30, 2009

A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?

சிறிலங்காவின் ஜனாதிபதியின் குடும்ப அரசியலில் மலிந்து போயுள்ள லஞ்ச ஊழல் இப்போ வெளிப்படையாகத் தெரியவருகிறது. அரச மேல் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதால், நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அது மலிந்து போயுள்ளதாகத் தெரிய வருகிறது.


வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் வன்னி மக்களுக்கான உணவு விநியோகம் மகிந்தவின் முக்கிய புள்ளிகளின் மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருப்பது ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே விடயத்தை நேற்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு முட்டைக்குக்கூட கப்பம் வாங்கப்படுவதாகவும், இந்த கப்பம் வாங்கும் விவகாரம் முட்டையில் தொடங்கி அனைத்துப் பங்கீட்டுப் பொருட்களிலும் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்று, அண்மையில் திறக்கப்பட்ட ஏ-9 வீதியால் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 50 ரூபா வீதம் அறவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணம் எங்கே செர்கின்றது என்பது, மகிந்தவின் ஆட்களுக்கே வெளிச்சம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, A9 பாதையால் பயணிப்போரிடத்தில் கப்பம் அறவிடப்படுவது தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது அரச தரப்பின் ஊழல் பெருச்சாளிகள் அறவிடும் கப்பம் பற்றி யாரும் பேசாதிருப்பது ஏன்..

பயமா? பங்கா?

Friday, December 25, 2009

ஆழிப் பேரலை புகட்டிய பாடம் எமக்கு நாம் தான் என்பதே!

பெரும்பகுதி கடலால் சூழப்பட்ட தமிழர் தாயகத்தில் ஆழிப் பேரலையினால் ஏற்பட்ட அழிவு பேரழிவு தான். இந்த இயற்கை அனர்த்தம் பற்றி புத்தாயிரமாம் ஆண்டில் புதிய மனித சமூகம் நன்கறிந்துள்ளது. தமிழரைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றவர்கள் ஆகையால் ஆழிப்பேரலை பற்றிய அறிவியல் ரீதியான தேடலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே எமது மக்களை எதிர்காலத்தில் காப்பாற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முடியும்.


ஆழிப் பேரலை ஊழித் தாண்டவமாடி எமதுறவுகளைக் காவு கொண்டு ஜந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பேரழிவைக் கண்ட எமது மக்களிற்கு உலக சமூகம் அனுப்பிய முழுமையான உதவிகள் சென்றடையாமலே போனதை வெளி உலகம் நன்கறிந்தும் அது பற்றி அக்கறையாக நியாயக் குரல் எழுப்பவில்லை.

நெடுங்காலப் போரின் வலியைச் சுமந்த மக்களிற்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறு ஆறுதல் கிடைத்திருந்த வேளையில்தான் இயற்கைப் பேரழிவும் ஏற்பட்டது. 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் மாதகல் தொடக்கம் அம்பாறை உகந்தை வரையிலும் குறுகிய நேர இடைவெளிக்குள் பேரழிவு ஏற்பட்டது. போரினால் தொடரழிவுகளைச் சந்தித்தவர்கள் இயற்கையின் அழிவுகளாலும் உடைந்து போனார்கள். ஏன் இப்படிக் கொடுமை நிகழ்ந்ததென மனம் பேதலித்து அங்கலாய்த்தவர்களின் மீள் வாழ்விற்கு உலக சமூகம் வழங்கிய உதவிகளையும் சிறி லங்காப் பேரினவாத அரசாங்கம் தடுத்தது. இயற்கை அழிவுகளையும் தனது தமிழின அழிவிற்கான ஒரு பகுதி வேலையாகவே சிறி லங்கா அரசாங்கம் நோக்கியது. அத்தகைய, நோக்கத்துடன் தான் துயர் மிகுந்த அந்த வேளையிலும் கூட தலைவர் பிரபாகரன் ஆழிப் பேரலையில் சிக்குண்டார் என்றெல்லாம் பொய்ப் பரப்புரைகளைச் செய்தது. இப்படியான கொடுமையான சிந்தனை காலியில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியது தான்.

சிறி லங்காவில் காலி மாவட்டமும் ஆழிப் பேரலையால் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இந்த இயற்கை அநர்த்தம் கோர தாண்டவமாடிக் கொண்டிருந்த வேளை அதற்குள் சிக்குண்ட இளம்பெண் ஒருவர் உயிரிற்காகப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளம் பெண்ணைக் காப்பாற்றுவது போல பாசாங்கு செய்த ஒருவர் அவரைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார். (இது நடந்தது சிங்கள தேசத்தில். சிங்கள அளம் பெண்ணிற்கு, சிங்கள நபரால்) அது போன்ற கொடுமையான சிந்தனையோடு தான் தமிழரைச் சிங்களப் பேரினவாதிகள் நோக்கினார்கள்.

தலைவர் பிரபாகரனோ பேரழிவை அடுத்து அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டார். 'ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களிற்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோன். அது போலவே தமிழ்பேசும் தாயக மண்ணிலும் தென்னிலங்கை கடலோரப் பகுதிகளிலும் தமது உற்றார் உறவினரைப் பலிகொடுத்து ஆறாத துயரில் ஆழ்ந்திருக்கும் இஸ்லாமிய, சிங்கள சகோதரர்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் உரித்தாகுக. தென்னாசிய நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உயிரிழப்புக்களைச் சந்தித்து துயருறும் மக்களின் சோகவுணர்விலும் பங்கு கொண்டு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றேன்."

இது தலைவர் பிரபாகரனின் அனுதாபச் செய்தி. அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தாயகத்தில் என்னென்ன உதவிகள் மக்களிற்குச் செய்ய வேண்டுமோ அவற்றை தாராளமாகவே செய்யுமாறு போராளிகளிற்கும் தளபதிகளிற்கும் தலைவர் பிரபாகரன் பணித்தார்.

தளபதிகளும் போராளிகளும் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்குத் தாராளமாகவே உதவினார்கள். சிறி லங்கா அரசாங்கமோ ~மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு| ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது. இதில் அன்றைய சிறி லங்காவின் ஜனாதிபதியான சந்திரிகா இடையறாது அக்கறையாச் செயற்பட்டார். வெளிநாடுகளின் தலைவர்களை ஏன் ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் கோபி அனானைக் கூட விடுதலைப் புலிகளின் ஆழுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் செல்லவிடாது தடுத்தார்.

உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.

ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும்.

போரினால் நெடுங்காலத் துயர் சுமந்தவர்களிற்கு ஆழிப் பேரலை பேரழிவை ஏற்படுத்தியது. ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் மீண்டும் ஆற்றப்பட முன்னரே சிறி லங்கா போரைத் தொடங்கியது. இப்பொழுது முழுமையாக தமிழினத்தைத் துவம்சம் செய்வதற்கானதாக சிறி லங்கா அரசால் மூர்க்கத்தனமாக இன ஒதுக்கல் முன்னெடுக்கப் படுகின்றது. தமிழரை அவர்களின் தாயகத்தில் முழுமையாக அழித்து விடுவதற்கான இறுதி நடவடிக்கையாக அது தமிழர்களை வதைத்து வருகின்றது. எப்படி ஆழிப் பேரலை ஏற்பட்டபோது எமக்கு நாமே என்று பணி செய்தோமோ அதே போன்றுதான் இன்றைய காலகட்டத்திலும் நாமே அவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை வருவதற்கு முன்னர் தமிழர் தாயக மண்ணில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அதனை நினைவூட்டுவது போல இன்று தாயக மக்கள் மழை வெள்ளத்தால் அவதியுறுகின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து மடுவிற்கு, மடுவில் இருந்து மல்லாவிக்கு, மல்லாவியில் இருந்து மாங்குளத்திற்கு, மாங்குளத்தில் இருந்து முள்ளியவளைக்கு, முள்ளியவலையில் இருந்து உடையார் கட்டிற்கு என மாறி மாறி இடம் பெயர்ந்து ஈற்றில் முள்ளிவாய்க்கால் கொடும் வதையோடு துன்பக்கடலில் துயருடன் வாழும் மக்களிற்கு வெள்ளமும் பாதிப்பினையே கொடுக்கின்றது. இக் கொடுமையில் பரிதவிக்கும் எமது உறவுகளிற்கு நாம்தான் துணையாக இருக்க முடியும்.

வளம்மிக்க வன்னி மண்ணில் போர் தீவிரம் மாகி இனத்தையே காழப்படுத்தியுள்ளது இதனால் வடுக்களைச் சுமந்தபடி வாழும் மக்களின் சுயபொருளாதாரக் கட்டமைப்பும் சிதைத்துள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ஐநாறு ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ முன்னூற்றி அறுபது ரூபாய், வெண்டிக்காய் ஒரு கிலோ நானூறு ரூபாய், பூசனிக்காய் ஒரு கிலோ இருநாறு ரூபாய் என என்றுமில்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. கொடிய வதைமுகாம் அவலம் , மழை வெள்ளம் என மக்களின் வாழ்வு பேரவலத்திற்குள் தள்ளப் பட்டுள்ளது.


இத்தனையும் நடக்கின்ற போதும் ஈவீரக்கமின்றி அந்தமக்களை கொடுமைப்படுத்தி வருகிறது சிறி லங்கா அரசாங்கம். ஆயினும் புலத்து மக்கள் இன்னும் என்ன செய்து கொண்டுள்ளனர் என்ற கேள்வி யாரிக்கு வரவில்லை என்றாலும் அவலத்தில் வாழும் மக்களிற்கு வருவது தவிர்க்க முடியாததே. ஆனால், இப்போது வன்னியில் வாழும் மக்களை சிந்தியுங்கள் எவ்வளவு துயர்? ஆழிப் பேரலையை இந்த மாதம் 25/26 மீண்டும் நினைவு படுத்தும் நாள் நெருங்குகின்ற போதும் வன்னியின் வடுக்களைச் சுமந்தமக்களை நினைத்துப்பார்ப்போம்?

எல்லாத் துயரிற்கும் ஓர் முடிவு வேண்டுமல்லவா? எனவே எமதினம் தொடர்ந்து போராடினால் தான் முடிவையும் விடிவையும் காண முடியும். கடலடிப் பூகம்பம் கடலைத் தாண்டி ஆழிப் பேரலை வந்தது. சோறு தந்த கடலே தந்த துயரைப் பொறுக்கலாம் மன்னிக்கலாம். மீண்டும் கடலுடன் உறவாடலாம்.

குழந்தைகள் பெண்களென வயது வேறுபாடின்றி ஈழத் தமிழரை அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக சிங்களப் பேரினவாதிகள் அழித்தே வருகின்றனர். ஆழிப் பேரலையிலும் கொடுமையாகவே சிங்களப் பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை தமிழர் பார்க்கின்றனர்.

ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு எப்படிப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.

ஆழிப் பேரலையின் பின்னான மீள்கட்டுமான வேலைகளை நேரில் பார்த்தவர்களால் தான் புலிகளின் பணிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே சிங்களப் பேரினவாத அரசு வெளிநாட்டவர் புலிகளின் ஆழுகைக்குள் செல்வது உண்மைகளை அறிய உதவும் என்று தடுத்தது.

எனவே, ஆழிப் பேரலையின் பின்னான செயற்பாடுகளை வைத்தும் யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்களே பல வழிகளிலும் உதவுகின்றீர்கள். அறிவியல் ரீதியாகவும் உங்களை வளர்த்து கடலெல்லை அதிகமாக உள்ள எமது நாட்டில் ஆழிப் பேரலையால் அழிவேற்படாமல் பாதுகாப்பது பற்றியும் கவனியுங்கள். பேரலையால் அள்ளுண்ட உயிர்களை எண்ணி!

Monday, December 21, 2009

தனிப்பட்ட கருத்தை மின்மடல் ஒன்றில் பரிமாறியதற்காக தமிழ் வைத்தியர் பணிநீக்கம்

மின்மடல் ஒன்றில் தனிப்பட்ட கருத்தைப் பரிமாறியதற்காக முரளி வல்லிப்புரநாதன் என்ற வைத்தியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சக சிங்கள வைத்தியரான கிரிஷாந்தா அபயசேனா முரளி வல்லிப்புரநாதனுக்கு அவசரம் என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் இலங்கையில் பன்னாட்டுச் சமூகத்தின் தலையீடு தேவையா என்று கேட்டு அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி ஒரு கருத்துக் கணிப்பு நடத்திவருகிறது எனக் குறிப்பிட்டு அதில் பங்கேற்பு தேவையில்லை என்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கு, முரளி எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பாதுகாப்பு மருத்துவ சேவை என்ற பெயரில் (வன்னி) முகாம்களில் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமானமற்று நடத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கச் சொல்கிறீர்களா? இதுகுறித்து வெளிப்படையாகவும் இனவெறியற்றும் விவாதிக்க நமக்கு (மருத்துவர்களுக்கு) இதுதான் சரியான நேரம் என்று கருதுகிறேன். அங்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லையெனில் சேனல் 4ஐப் பார்த்து உங்களை விவரப்படுத்திக் கொள்ளுங்கள். எதுவாயினும் சிஎன்என் கருத்துக் கணிப்பில் நாம் வாக்களிப்பதன் மூலம் பன்னாட்டுச் சமூகம் உடனே தலையிட்டுவிடப் போவதில்லை. உங்களுடைய பதிலை (வெள்ளை வேனை அல்ல) எதிர்ப்பார்க்கிறேன் என்று பதில் அனுப்பியிருக்கின்றார்.

சில நாட்கள் கழித்து உங்களுடைய மின்னஞ்சல் பதில் மூலம் சிறிலங்கா அரசிற்கு அவப் பெயர் ஏற்படுத்தியுள்ளது நாங்கள் நடத்திய பூர்வாங்க விசாரணையில் தெரிவந்துள்ளது. அதனடிப்படையில் நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்கள் மீதான குற்றச்சாற்று மீது முழு விசாரணை நடைபெறும். என்று தெரிவித்து சுகாதார அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று முரளிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

பணிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அனைவருக்கும் முரளி அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சக மருத்துவர் அபயசேனா அனுப்பியிருந்த மின்னஞ்சலிற்கு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருந்தேன். அது எனது அடிப்படை உரிமை. அதற்கும் எனது அரசு பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் எந்த விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளனர். போர் முடிந்த பிறகு சிறுபான்மையினரிடம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தார்களே அதற்கான சிறந்த வழி இதுதானா? என்று கேள்வியெழுப்பியிருக்கின்றார்.

கிரிஷாந்த அபயசேகரவின் மடல்

From: Dr. Chrishantha Abeysena <***************@mfac.kln.ac.lk>
Subject: Fw: urgent

The CNN web site and the TV are now conducting a voteon , "Should the International Community intervene in Sri Lanka ”?Pl click the linkbelow and say no.

Also Please forward this mail to all your friends asking them to do the same.

http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/

Thank you very much.

முரளி அவர்களது பதில் மடல்

From: drmurali_1999@yahoo.com
Subject: Re: Fw: urgent

Dear Dr.Abeysena,
What do you want us to do? Observe silently the inhuman treatment taking place at the Forced Detention Camps (FDC) under the name of provision of health services and security? I think this is time for us (the medical professionals) to discuss this more openly without any racial feelings. I hope you are aware of what is realy happening at the FDC if not please watch the channel 4 and enlighten yourself.
Click here
Anyway IC will not interfere just because somebody vote at CNN.
Await you kind response (except the white van reaction)
Thank you
முரளி

மூலம் : இயங்குவெளி

Friday, December 18, 2009

சரத் பொன்சேகாவின் கொள்கை பிரகடனம்

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பௌத்த, இந்து , முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆசிகளை வழங்கினர்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கொள்கைப் பிரகடனத்தை கண்டியில் வெளியிட்டு வைத்தார்.

அதன் தமிழாக்கம் வருமாறு:

01. இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே, முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,

* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

02. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

03. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

04. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்...

05. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

06. முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

07. ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

08. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

09. நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

10. கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

மாமா மகிந்தாவிற்கு மருமகன் சனீஸ்வரன் எழுதும் உரிமை மடல்

அன்புள்ள மாமா உமது புண்ணியத்ததால் இவ்விடம் நானும் இன்ன பிற ஜந்துகளும் (யாழ்ப்பாணத்தில் உமது ஆட்சியின் கீழ் இருப்பவர்களை இப்படியும் அழைக்கலாம்) நலம். அதுபோல் உமது நலனையும் ஆந்திரா பெருமாள் காப்பாராக (பெருமாளை யார் காப்பாரோ)

மாமா! வெற்றிக்களிப்பில் இருக்கும் உங்களை நான் (சனி) பற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். துணிச்சல் மிகுந்த உங்கள் செயற்பாடுகளால் இலங்கையில் சிறுபான்மை என்ற இனத்தையே இல்லாது செய்துவிட்டீர்கள். தமிழ் பேச முயற்சிப்பதன் மூலம் இப்போது எமது மாமாவாகவும் ஆகிவிட்டீர்கள். வெல்டன் மாமா வென்றுவிட்டீர்கள். உலகின் நான்காவது பெரிய படையாலேயே வெல்ல முடியாத பிரபாகரனை தடம் போட்டு பிடித்து வென்றுவிட்டீர்களே மாமா! அதென்ன மாமா மகிந்த சிந்தனை கண்டறியாத மகிந்த சிந்தனை. இப்ப இந்த சனீஸவரன் சிந்தனையை கேளுங்கோ மாமா. பிரபாகரன் இருக்கும் வரைதான் மகிந்த சிந்தனையும் மயிராண்டி சிந்தனையும்.

ஆறுவருசம் ஆண்டு போட்டீர்கள் மாமா. உங்களுக்கெண்டு தேடியது என்னதான் மாமா. தம்பி சகோதரங்கள் நல்ல கொள்ளையடிக்க நீங்கள் பாத்துக்கொண்டிருந்ததுதான். தம்பிமாரை வாழ வைச்சு என்ன மாமா? உங்கடை பிள்ளையளை வாழ வைக்கவேணும் மாமா இனி ஆறுவருசமும் நீங்கள்தான் மாமா தனிக்காட்டு ராஜாவாக நின்று எல்லா வளங்களையும் சுருட்ட வேணும். புலி இருந்த காலத்திலை தம்பிமாற்றை உதவி தேவைதான் மாமா. அதுதான் துணிவா சண்டையும் பிடிச்சீங்கள் இல்லையெண்டு சொல்லேல்லை. அதுதான் முடிஞ்சு போச்சுதே “தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்”தான் மாமா ஆனால் அது சண்டை பிடிக்கிற நேரம்தானே மாமா! இப்பதான் சண்டையே இல்லை இனி எதுக்கு மாமா தம்பி. போட்டுத்தள்ளுங்க மாமா. தம்பி சகோதரங்களாலேயே உங்கள் பதவிக்கு ஆப்பு வரலாம் போலிருக்கிறது மாமா. தமிழில் ஒரு பாட்டு இருக்கிறது மாமா “ அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்று அதனாலை இந்தநேரத்திலை அவங்களை போட்டுத் தள்ளிப்போட்டு என்ரை மருமகன் நாமல் தம்பியை இராணுவ தளபதி ஆக்குங்க மாமா என்ன இருந்தாலும் அவன் உங்கடை ரத்தம்தானே மாமா. அழகுராணி மாமியை பிரதமரா ஆக்குங்கோ மாமா அலரி மாளிகையே ஒரு கிளு கிளுப்பாயிருக்கும் மாமா. கிழட்டு விக்கிரமஸ்ரீயையும் போட்டுத் தள்ளுங்கோ மாமா!.

மாமா! ஒரு ரகசியம் சொல்லுறன் கேளுங்கோ காதைக்கிட்டவா கொண்டு வாங்கோ! உவன் கருணா பிள்ளையான் ஆக்கள் ரொம்ப ஆபத்தானவங்கள் மாமா! அந்த பிரபாகரனோடை ஒரு கோப்பையிலை திண்டு குடிச்சு கிடந்தவங்கள் உறவாடி மகிழ்ந்தவங்கள். பிரபாகரன் உவன் கருணா வாறான் எண்டால் செக் பண்ணக்கூட விடுகிறதில்லையாமெல்லே. அப்பிடி தேனும் பாலுமா இருந்தவனையே காட்டிக் குடுத்தவங்கள் மாமா உந்த பிரம்ம சக்தியளும். கவனம் மாமா நாளைக்கு அவன் சரத் வந்து ஏதேனும் கூட கூட்டிக் குடுக்கிறன் எண்டால் மாறி நிண்டு உங்களைப் போட்டுடுவான்கள். கவனம் மாமா கெதிப்பண்ணி உவன்கள் இரண்டு பேரையும் போடுற வழியைப் பாருங்கோ. உவங்களுக்கு சகல ஆயுதங்களும் இயக்கத் தெரியும் அவங்கள் உங்களுக்கு ஆப்படிக்க முன்னம் நீங்கள் அவன்களுக்கு ஆப்படிச்சிடுங்கோ மாமா!

மாமா இன்னொருத்தன் மிச்சம் பொல்லாதவன் மாமா! காரைநகர் கடற்படைத்தளம் தாக்கியழிச்ச டக்கண்ணாவைத்தான் சொல்லுறன் மாமா! அவன் உங்கடை மட்டக்களப்பு சிறை யுடைச்சு தப்பினவன் மாமா! ஆட்டோக்காரன் காசு கேட்டதிற்கே போட்டுத் தள்ளினவன் மாமா! நாளைக்கு நீங்கள் ஏதும் வசந்தக் கணக்கு கேட்டால் உங்களையும் போட்டுடுவான் மாமா! மத்தியிலை கூச்சி மாநிலத்திலை பேச்சி என்றெல்லாம் புலுடாவிட்டு உங்கடை இமேஜை ஸ்பாயில் செய்யப் போறான் மாமா. போடுங்கோ மாமா அவனுக்கு அடுத்த ஆப்பை. என்னமோ சனாதிபி தேர்தலுக்கு 15 டிமாண்ட வைக்கிறானாம் இவன் ஆர் மாமா உங்களுக்கு டிமாண்ட் வைக்க. உங்கடை எச்சில் சோத்தை நம்பி வாழுற இவங்களை இனி தலையெடுக்க விடலாமோ.. சித்தார்த்தன் ஸ்ரீதரன் எல்லாம் உங்களக்கு ஜூஜிப்பி மாமா! அவங்களை வேண்டுமானால் உங்கடை மோன் நாமலைக் கொண்டு போட்டுத் தள்ளுங்கோ மாமா!

இப்ப யோசிப்பியள்! எல்லா தமிழ் அரசியல் தலையளையெல்லாம் போட்டுட்டு யாரை வச்சு அரசியல் செய்யிறதெண்டுதானே? ஏன்மா எங்கடை அறிக்கை அனந்த சங்கரிதான்மாமா உங்களுக்கு சூட்டபிளா இருப்பார். எழும்பி நடக்கேலாத ஜென்மம், ஆயுதம் எங்கை தூக்கப்போறார். இவர்தான் மாமா உங்களை தூக்கி நிறுத்தப் போறவர். இவரைப் போல ரண்டு மூணு கிழடுகளாப் பாத்து தமிழ் புத்தி சீவிகள் எண்ணு சொல்லிக் கொள்ளுற எழும்பி நடக்கேலாத பேராசிரியர்களாக சிலரையும் பிடிச்சு தமிழ் அரசியல்வாதி வெற்றிடங்களை நிரப்பலாம்தானே மாமா.

என்னமோ மாமா சொல்லுறதை சொல்லிப்போட்டன். காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விடாது. கழுத்திலையும் சிவப்பு துணி போட்டுக் கொண்டு திரியுறியள். பிடிச்சு நெரிச்சுப் போடுவங்கள். ஆரையும் ஆயுதம் தூக்கினவங்களை நம்பாதீங்க மாமா. ஒண்ணா மண்ணா இருந்தவங்களையே காட்டிக் கொடுத்த சாதி வெளுத்த தெல்லாம் பால் என்டு நினைக்கிற உங்களை சும்மா விடுவங்களே! கவனம் மாமா. தமிழிலை கொலையும் செய்வாள் பத்தினி எண்டு ஒரு பழமொழி இருக்குது நான் சொல்லத்தேவையில்லை மாமியிலையும் ஒரு கண் வச்சிருங்கோ.
சரி மாமா நிறைய எழுதிப் போட்டன். மேற்கொண்டு உங்கடை விருப்பம்.

யாழ்ப்பாணத்திலிருந்து
அன்பு மருமகன்
சனீஸ்வரன்

Monday, December 7, 2009

இலங்கையின் கிழக்கு பகுதியில் புதிய போராட்டக்குழு

பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு ஒன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் இது தனித் தமிழ் நாடு ஒன்றை கோரி அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவிருப்பதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டளைத் தளபதி என கூறும் கோணேஸ் என்பவர், இந்த யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்திருப்பதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு உண்மையில் தீர்வு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இதன் நிமித்தமே இந்த இராணுவத்தை தொடக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, வடக்கிழக்கு மாகாணத்தை தனி தமிழ் ஈழமாக மீட்போம் என அவர் டைம்ஸ் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் விடுதலை இராணுவம் விரைவில் தமது தாக்குதல்களை ஆரம்பிப்பர் எனவும் தமக்கு தெரிவித்துள்ளதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாம் தமீழ விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இராணுவக் குழு என தெரிவித்துள்ள கோணேஸ், எனினும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Thursday, December 3, 2009

துரோகி கருணாவின் வாகன விபத்து: கொலை முயற்சியா?


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அவ்வியக்கத்தை பலவீனப்படுத்தி , பின்னர் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது, புலிகளின் யுத்திகள் பலவற்றையும், இரகசியங்களையும் அரசாங்கத்திற்கு கூறி மகிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த கருணாவை இப்போது எந்த அரசாங்க அமைச்சர்களும் கண்டுகொள்வது இல்லை. புலிகளை யுத்தரீதியாக அரசாங்கம் வெற்றிகொண்ட பின்னர் இவரை இலங்கை அரசு தற்போது ஓரங்கட்டிவிட்டது என்பதே உண்மை.

கருணாவிற்கு தற்போது புதிய தலைவலியும் ஆரம்பம். சமீபத்தில் இவர் வாகனம் பெரும் விபத்தில் சிக்கியது யாவரும் அறிந்ததே. முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றவேளை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், இதில் பல விடயங்கள் பின்னணியில் இருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பில் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பொலீஸ் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கருணாவின் வாகனம் இருப்பதை கண்டறியப்பட்டது

கருணாவின் வாகனம் முன் பக்கமாக சேதமடைந்ததை விட பயணிகள் பயணிக்கும் பின் பக்கம் கூடுதலாகச் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இவரது வாகனம் மோதவில்லை, மாறாக இவர் வாகனம் மேல் வேறு ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிகிறது. அப்படியாயின் கருணா வாகத்தின் மீது யார் வாகனம் வந்து மோதியிருக்கும். இது ஒரு கொலை முயற்சியா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

இது ஒருபுறம் இருக்க அந்த விபத்து நடந்த நாள் முதல் கருணா ஏன் அறிக்கைகள் எதனையும் விடவில்லை, அவர் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதுடன் அவர் எங்கு இருக்கிறார் என்பது போன்ற விபரங்களும் வெளியிடப்படுவது இல்லை. விபத்தில் சிக்கிய கருணா தற்போது மிரண்டு போயுள்ளார் என சிலர் அரசல் புரசலாக பேசுகின்றனர். கோத்தபாயவுடன் நெருங்கிய உறவைப் பேணிவரும் ஒரு அமைச்சருக்கும் கருணாவிற்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் உச்சக்கட்டமே இந்த விபத்து எனவும் கூறப்படுகிறது.

அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அதனைத் தொடர்ந்து அமையவிருக்கும் புது அமைச்சரவையில் கருணாவுக்கும் இடம் உண்டா என்பதே தற்போதைய கேள்வி. காரியம் ஆகியவுடன் சரத் பொன்சேகாவையே களற்றிவிட்ட மகிந்தவின் அரசிற்கு கருணா எம்மாத்திரம்?..