Monday, March 9, 2009

கேட்கிறவன் கேனை பயலாக இருந்தால் எருமை மாடும் ஏரோ பிலேன் ஓடுமாம்

தமிழகத்தில் நாடக மேடைகள் போடப்படுகின்றன, நடிப்பதற்கு ஆயத்தமாகின்றனர் அரசியல்வாதிகள். இந் நாடகத்தில் பிரசார பொருளாக எடுத்திருக்கும் தலைப்பு ஈழத்தமிழர் பிரச்சினை. முக்கிய கதாபாத்திரங்களாக கருணாநிதி ஐயாவும் ஜெயலலிதா அம்மாவும்.

வழமையாக இவர்களின் நாடகங்களை பார்த்து இரசித்து வந்த தமிழ்நாட்டு மக்கள் இனியும் இரசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இக் கதா பாத்திரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களின் ஒரே நோக்கம் நாடகம் வெற்றி பெற்றால் போதும் என்பதே. இது வரை ஏமாந்து விட்ட தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏமாறுவார்களா?

ஈழபிரச்சினை தொடர்பில் தமிழக மக்கள் கடுமையான ஆதரவு நிலையை கொண்டிருக்கும் சந்தர்ப்பதை பயன்படுத்தி ஈழ தமிழர் பிரச்சினை குறித்து பெரிதளவில் இதுவரை அலட்டிக் கொள்ளாத ஜெயலலிதா அம்மையார் தனது சுயலாப அரசியலுக்காக இன்று மேற்கொண்ட உண்ணாவிரத நாடகத்தில் சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறியிருக்கிறார்.

கருணாநிதி ஐயா அவர்களும் இதைதான் முன்வைப்பார், ஆனால் எந்த ரூபத்தில் முன்வைப்பார் என்பதை பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.

வழமையாக தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக மக்களை ஏமாத்தி வாக்கு கேட்கும் பொருட்கள் இலவச டிவி, இலவச சேலை தான்.

No comments:

Post a Comment