Saturday, March 7, 2009

சாலை பகுதியை ஊடறுத்து தாக்கிய விடுதலைப் புலிகள்:ஒரு டிவிசன் படையினர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர்.
55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்றது.
நம்பத்தகுந்த தகவலின் படி ஒருடிவிசன் படையினர் பலியானதாக உறிதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன...பெரும்பாலும் தற்போது செய்திகளை விடுதலைப் புலிகள் ஊடகங்களுக்கு தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment