Saturday, March 20, 2010

ரம்பாவை திருமணம் செய்யும் இலங்கை தமிழர்


நடிகை ரம்பாவுக்கும் தொழிலதிபர் இந்திரனுக்கும் வரும் ஏப்ரல் 8-ம் தேதி திருப்பதி திருமலையில் திருமணம் நடக்கிறது. சென்னையில் ஏப்ரல் 11-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பிரபல நடிகை ரம்பா மேஜிக்வுட்ஸ் எனும் கனடா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமானார். அப்போது அவருக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் காதல் ஏற்பட்டது. இந்திரன் ரூ 2000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர். முக்கியமாக இலங்கைத் தமிழர்.

இந்த காதலுக்கு ரம்பாவின் தரப்பில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரம்பா- இந்திரன், திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது.

திருமண தேதியை தற்போது முடிவு செய்து அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழ் விநியோகம் நடந்து வருகிறது.நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண வரவேற்பு சென்னையில் 11-ந்தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment