Sunday, March 14, 2010

இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது - அமெரிக்கா


ஊடகவியலாளர்கள் அரசாங்க விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குற்றம் சுமத்தி வருவகின்றனர்..

மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவான வகையில் செய்திகளை வெளியிடுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிடுவதில் ஊடகங்கள் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கி வருகின்றன.

எவ்வாறெனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சில சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

யுத்த காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் வெகுவாக பதிவாகியிருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பயன்படுத்தப்பட்டு வந்த சிறுவர் போராளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டிடயுள்ளது.

No comments:

Post a Comment