Friday, December 18, 2009

மாமா மகிந்தாவிற்கு மருமகன் சனீஸ்வரன் எழுதும் உரிமை மடல்

அன்புள்ள மாமா உமது புண்ணியத்ததால் இவ்விடம் நானும் இன்ன பிற ஜந்துகளும் (யாழ்ப்பாணத்தில் உமது ஆட்சியின் கீழ் இருப்பவர்களை இப்படியும் அழைக்கலாம்) நலம். அதுபோல் உமது நலனையும் ஆந்திரா பெருமாள் காப்பாராக (பெருமாளை யார் காப்பாரோ)

மாமா! வெற்றிக்களிப்பில் இருக்கும் உங்களை நான் (சனி) பற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். துணிச்சல் மிகுந்த உங்கள் செயற்பாடுகளால் இலங்கையில் சிறுபான்மை என்ற இனத்தையே இல்லாது செய்துவிட்டீர்கள். தமிழ் பேச முயற்சிப்பதன் மூலம் இப்போது எமது மாமாவாகவும் ஆகிவிட்டீர்கள். வெல்டன் மாமா வென்றுவிட்டீர்கள். உலகின் நான்காவது பெரிய படையாலேயே வெல்ல முடியாத பிரபாகரனை தடம் போட்டு பிடித்து வென்றுவிட்டீர்களே மாமா! அதென்ன மாமா மகிந்த சிந்தனை கண்டறியாத மகிந்த சிந்தனை. இப்ப இந்த சனீஸவரன் சிந்தனையை கேளுங்கோ மாமா. பிரபாகரன் இருக்கும் வரைதான் மகிந்த சிந்தனையும் மயிராண்டி சிந்தனையும்.

ஆறுவருசம் ஆண்டு போட்டீர்கள் மாமா. உங்களுக்கெண்டு தேடியது என்னதான் மாமா. தம்பி சகோதரங்கள் நல்ல கொள்ளையடிக்க நீங்கள் பாத்துக்கொண்டிருந்ததுதான். தம்பிமாரை வாழ வைச்சு என்ன மாமா? உங்கடை பிள்ளையளை வாழ வைக்கவேணும் மாமா இனி ஆறுவருசமும் நீங்கள்தான் மாமா தனிக்காட்டு ராஜாவாக நின்று எல்லா வளங்களையும் சுருட்ட வேணும். புலி இருந்த காலத்திலை தம்பிமாற்றை உதவி தேவைதான் மாமா. அதுதான் துணிவா சண்டையும் பிடிச்சீங்கள் இல்லையெண்டு சொல்லேல்லை. அதுதான் முடிஞ்சு போச்சுதே “தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்”தான் மாமா ஆனால் அது சண்டை பிடிக்கிற நேரம்தானே மாமா! இப்பதான் சண்டையே இல்லை இனி எதுக்கு மாமா தம்பி. போட்டுத்தள்ளுங்க மாமா. தம்பி சகோதரங்களாலேயே உங்கள் பதவிக்கு ஆப்பு வரலாம் போலிருக்கிறது மாமா. தமிழில் ஒரு பாட்டு இருக்கிறது மாமா “ அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்று அதனாலை இந்தநேரத்திலை அவங்களை போட்டுத் தள்ளிப்போட்டு என்ரை மருமகன் நாமல் தம்பியை இராணுவ தளபதி ஆக்குங்க மாமா என்ன இருந்தாலும் அவன் உங்கடை ரத்தம்தானே மாமா. அழகுராணி மாமியை பிரதமரா ஆக்குங்கோ மாமா அலரி மாளிகையே ஒரு கிளு கிளுப்பாயிருக்கும் மாமா. கிழட்டு விக்கிரமஸ்ரீயையும் போட்டுத் தள்ளுங்கோ மாமா!.

மாமா! ஒரு ரகசியம் சொல்லுறன் கேளுங்கோ காதைக்கிட்டவா கொண்டு வாங்கோ! உவன் கருணா பிள்ளையான் ஆக்கள் ரொம்ப ஆபத்தானவங்கள் மாமா! அந்த பிரபாகரனோடை ஒரு கோப்பையிலை திண்டு குடிச்சு கிடந்தவங்கள் உறவாடி மகிழ்ந்தவங்கள். பிரபாகரன் உவன் கருணா வாறான் எண்டால் செக் பண்ணக்கூட விடுகிறதில்லையாமெல்லே. அப்பிடி தேனும் பாலுமா இருந்தவனையே காட்டிக் குடுத்தவங்கள் மாமா உந்த பிரம்ம சக்தியளும். கவனம் மாமா நாளைக்கு அவன் சரத் வந்து ஏதேனும் கூட கூட்டிக் குடுக்கிறன் எண்டால் மாறி நிண்டு உங்களைப் போட்டுடுவான்கள். கவனம் மாமா கெதிப்பண்ணி உவன்கள் இரண்டு பேரையும் போடுற வழியைப் பாருங்கோ. உவங்களுக்கு சகல ஆயுதங்களும் இயக்கத் தெரியும் அவங்கள் உங்களுக்கு ஆப்படிக்க முன்னம் நீங்கள் அவன்களுக்கு ஆப்படிச்சிடுங்கோ மாமா!

மாமா இன்னொருத்தன் மிச்சம் பொல்லாதவன் மாமா! காரைநகர் கடற்படைத்தளம் தாக்கியழிச்ச டக்கண்ணாவைத்தான் சொல்லுறன் மாமா! அவன் உங்கடை மட்டக்களப்பு சிறை யுடைச்சு தப்பினவன் மாமா! ஆட்டோக்காரன் காசு கேட்டதிற்கே போட்டுத் தள்ளினவன் மாமா! நாளைக்கு நீங்கள் ஏதும் வசந்தக் கணக்கு கேட்டால் உங்களையும் போட்டுடுவான் மாமா! மத்தியிலை கூச்சி மாநிலத்திலை பேச்சி என்றெல்லாம் புலுடாவிட்டு உங்கடை இமேஜை ஸ்பாயில் செய்யப் போறான் மாமா. போடுங்கோ மாமா அவனுக்கு அடுத்த ஆப்பை. என்னமோ சனாதிபி தேர்தலுக்கு 15 டிமாண்ட வைக்கிறானாம் இவன் ஆர் மாமா உங்களுக்கு டிமாண்ட் வைக்க. உங்கடை எச்சில் சோத்தை நம்பி வாழுற இவங்களை இனி தலையெடுக்க விடலாமோ.. சித்தார்த்தன் ஸ்ரீதரன் எல்லாம் உங்களக்கு ஜூஜிப்பி மாமா! அவங்களை வேண்டுமானால் உங்கடை மோன் நாமலைக் கொண்டு போட்டுத் தள்ளுங்கோ மாமா!

இப்ப யோசிப்பியள்! எல்லா தமிழ் அரசியல் தலையளையெல்லாம் போட்டுட்டு யாரை வச்சு அரசியல் செய்யிறதெண்டுதானே? ஏன்மா எங்கடை அறிக்கை அனந்த சங்கரிதான்மாமா உங்களுக்கு சூட்டபிளா இருப்பார். எழும்பி நடக்கேலாத ஜென்மம், ஆயுதம் எங்கை தூக்கப்போறார். இவர்தான் மாமா உங்களை தூக்கி நிறுத்தப் போறவர். இவரைப் போல ரண்டு மூணு கிழடுகளாப் பாத்து தமிழ் புத்தி சீவிகள் எண்ணு சொல்லிக் கொள்ளுற எழும்பி நடக்கேலாத பேராசிரியர்களாக சிலரையும் பிடிச்சு தமிழ் அரசியல்வாதி வெற்றிடங்களை நிரப்பலாம்தானே மாமா.

என்னமோ மாமா சொல்லுறதை சொல்லிப்போட்டன். காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விடாது. கழுத்திலையும் சிவப்பு துணி போட்டுக் கொண்டு திரியுறியள். பிடிச்சு நெரிச்சுப் போடுவங்கள். ஆரையும் ஆயுதம் தூக்கினவங்களை நம்பாதீங்க மாமா. ஒண்ணா மண்ணா இருந்தவங்களையே காட்டிக் கொடுத்த சாதி வெளுத்த தெல்லாம் பால் என்டு நினைக்கிற உங்களை சும்மா விடுவங்களே! கவனம் மாமா. தமிழிலை கொலையும் செய்வாள் பத்தினி எண்டு ஒரு பழமொழி இருக்குது நான் சொல்லத்தேவையில்லை மாமியிலையும் ஒரு கண் வச்சிருங்கோ.
சரி மாமா நிறைய எழுதிப் போட்டன். மேற்கொண்டு உங்கடை விருப்பம்.

யாழ்ப்பாணத்திலிருந்து
அன்பு மருமகன்
சனீஸ்வரன்

No comments:

Post a Comment