Thursday, December 3, 2009

துரோகி கருணாவின் வாகன விபத்து: கொலை முயற்சியா?


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அவ்வியக்கத்தை பலவீனப்படுத்தி , பின்னர் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது, புலிகளின் யுத்திகள் பலவற்றையும், இரகசியங்களையும் அரசாங்கத்திற்கு கூறி மகிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த கருணாவை இப்போது எந்த அரசாங்க அமைச்சர்களும் கண்டுகொள்வது இல்லை. புலிகளை யுத்தரீதியாக அரசாங்கம் வெற்றிகொண்ட பின்னர் இவரை இலங்கை அரசு தற்போது ஓரங்கட்டிவிட்டது என்பதே உண்மை.

கருணாவிற்கு தற்போது புதிய தலைவலியும் ஆரம்பம். சமீபத்தில் இவர் வாகனம் பெரும் விபத்தில் சிக்கியது யாவரும் அறிந்ததே. முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றவேளை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், இதில் பல விடயங்கள் பின்னணியில் இருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பில் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பொலீஸ் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கருணாவின் வாகனம் இருப்பதை கண்டறியப்பட்டது

கருணாவின் வாகனம் முன் பக்கமாக சேதமடைந்ததை விட பயணிகள் பயணிக்கும் பின் பக்கம் கூடுதலாகச் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இவரது வாகனம் மோதவில்லை, மாறாக இவர் வாகனம் மேல் வேறு ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிகிறது. அப்படியாயின் கருணா வாகத்தின் மீது யார் வாகனம் வந்து மோதியிருக்கும். இது ஒரு கொலை முயற்சியா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

இது ஒருபுறம் இருக்க அந்த விபத்து நடந்த நாள் முதல் கருணா ஏன் அறிக்கைகள் எதனையும் விடவில்லை, அவர் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதுடன் அவர் எங்கு இருக்கிறார் என்பது போன்ற விபரங்களும் வெளியிடப்படுவது இல்லை. விபத்தில் சிக்கிய கருணா தற்போது மிரண்டு போயுள்ளார் என சிலர் அரசல் புரசலாக பேசுகின்றனர். கோத்தபாயவுடன் நெருங்கிய உறவைப் பேணிவரும் ஒரு அமைச்சருக்கும் கருணாவிற்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் உச்சக்கட்டமே இந்த விபத்து எனவும் கூறப்படுகிறது.

அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அதனைத் தொடர்ந்து அமையவிருக்கும் புது அமைச்சரவையில் கருணாவுக்கும் இடம் உண்டா என்பதே தற்போதைய கேள்வி. காரியம் ஆகியவுடன் சரத் பொன்சேகாவையே களற்றிவிட்ட மகிந்தவின் அரசிற்கு கருணா எம்மாத்திரம்?..

No comments:

Post a Comment