Monday, October 12, 2009

வெள்ளைக்கொடியுடன் வந்த புலித்தேவன், நடசேன் உள்ளிட்டக் குழுவினர் கோதாபய ராஜபக்~வின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

இராணுவத்தினரிடம் சரணடையவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை மே மாதம் 18ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~வின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ~விந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~, போர்க் கைதிகளை வைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்றவிடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது சரணடைய வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் - முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சிரே~;ட ஆலோசகர் பசில் ராஜபக்~ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment