Thursday, August 27, 2009

செப்டம்பர் 9ம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு நேரம் கூடாது.

ஜோதிட கணிப்புக்களுக்கமைய செப்டம்பர் 09ம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு மட்டுமல்லாது ஆட்சியாளர்களின் நேரமும் கூடாதுள்ளது. இந்த நிலையில், கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின், அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தொழில் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மலிக் சமரவீக்ரமவிற்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் காமினி அத்துகோரலவின் மகளின் திருமண வைபவம் கொழும்பு சினமன் கார்டின் விடுதியில் நடைபெற்ற போதே அமைச்சர் மேர்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.இந்த திருமண வைபத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் அமைச்சர்களும், அரசியல் வாதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் சமல் ராஜபக்~ களமிறக்கப்படுவது குறித்தே இந்த வைபவத்திற்கு வந்திருந்த அனைத்து அரசியல் வாதிகளும் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்ட விடயமாகவிருந்தது.

இவ்வாறு சமல் ராஜபக்~ இரத்தினபுரி மாவட்டத்தில் களமிறக்கப்படுவாராயின், அரசியல் ரீதியாக தாம் தீர்மானத்தை எடுக்க நேரிடும் என மிகவும் ஆவேசமாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த பவித்ரா வன்னியாராச்சி, நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

தென் மாகாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை அனார்கலி ஆகர்~hக்கு, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் புதல்வர் நாமல் மற்றும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் நடிகைகள் காய்ச்சல் (மேனியா) குறித்து இங்கு வந்திருந்த அரசியல் வாதிகளின் வாயில் முனுமுனுக்கப்பட்ட மற்றுமொரு விடயமாகவிருந்தது.

No comments:

Post a Comment