Sunday, July 19, 2009

ஜாதகத்தால் பறிபோன சரத் பொன்சேகாவின் பதவி

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சரத் பொன்சேகா அந்தப் பதவியிலிருந்து அவசரமாக துரத்தியடிக்கப்பட்டமை தொடர்பாக தற்போது அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு இராஜ யோகம் இருக்கின்ற தகவல் வெளிவந்ததை அடுத்து அவர் இராணுவத் தளபதியிலிருந்து ஜனாதிபதியினால் விரட்டியடிக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் தமது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்~வினால் ரம்புக்கன பிரதேசத்திலுள்ள பிரபல சோதிடரொருவரிடம் சரத் பொன்சேகாவின் ஜாதகம் கணிக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஜாதகத்தின் பலாபலனே சரத் பொன்சேகாவின் பதவி பறிபோக காரணியமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்~, ரம்புக்கன தேரர் என அழைக்கப்படும் பிரபல சோதிடரைச் சந்திக்க வாரியபொல பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். கம்பஹா காணி சொத்துவிற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் குறித்த சோதிடரின் மிகவும் வேண்டப்பட்டவர் என்பதனால் அவரையும் பசில் ராஜபக்~ இந்த இரகசியப் பயணதின்போது அழைத்துச் சென்றுள்ளார்.

தனது மற்றும் ஜனாதிபதியின் ஜாதகங்களின் பலாபலன்களைக் கேட்டறிந்த பசில் ராஜபக்~ சற்று குழப்பமடைந்த நிலையில், மூன்று ஜாதகக் குறிப்புக்களை தேரரிடம் கொடுத்து, இந்தக் குறிப்புக்களின் பலாபலன்களையும் அறிந்து கூறுமாறு கேட்டுள்ளார்.

அந்தத் தேரர் சற்று சுகயீனமுற்றிருந்த போதிலும், பசில் ராஜபக்~வின் வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையில், நீண்ட நேரத்திற்குப் பின்னர் அந்த ஜாதகக் குறிப்புக்களைக் கணித்துக் கூறியுள்ளார். இதன் காரணமாக பசில் ராஜபக்~விற்கு கிதுல் சக்கரையுடன் பல தடவை தேனீர் அருந்த நேரிட்டுள்ளது.

ஜாதகக் குறிப்புக்களைப் பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தில் அது யாருடையவை என பசில் ராஜபக்~ குறிப்பிடாத போதும் அதனைப் பெற்றுக்கொண்டு சிறிது நேரத்தில் அதில் ஒரு குறிப்பைக் காட்டி இது இராணுவத் தளபதியின் ஜாதகக் குறிப்பு தானே என தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை மறுக்க முடியாத நிலையில் உண்மையை ஏற்றுக்கொண்;ட பசில் ராஜபக்~ ஏனைய இரண்டு ஜாதகக் குறிப்புகள் யாருடையது என்ற பெயரை வெளியிடாது இவை உறவினர்களுடையது எனக் கூறியுள்ளார்.

பின்னர் ஜாதகக் குறிப்பைக் கணித்த தேரர், 1950ம் ஆண்டு டிசம்பர் 18ம் திகதி 2.06க்கு அம்பலான்கொடயில் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சரத் பொன்சேகா துலா இராசி எனவும், மிகுந்த அதிஸ்டமிக்க இந்த நபர், எந்தவொரு எதிரியையும் அச்சமின்றி வெற்றிக்கொள்ளும் அதிஸ்டம் கொண்டவர் எனக் கூறியுள்ளார்.

அத்துடன், சரத் பொன்சேகாவின் ஜாதகத்திற்கமைய அவர் பெற்றுக்கொள்ளும் வெற்றிகளை ஏனையோர் பறித்துக்கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்த நபர், எவரும் எதிர்பாராத வண்ணம் மக்கள் குலத்திற்குத் தலைமை வகிக்கும் பலம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள தேரர், 2009 செப்டம்பர் 9ம் திகதிக்குப் பின்னர் தமது ஜாதகத்தின் பலம் உச்சமடைந்து நாட்டின் அரசாழும் மிகப்பெரிய யோகம் பெற்ற பாக்கியவான் எனவும் தேரர் கூறியுள்ளார்.

அத்துடன் நினைத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரையில் முன்வைத்த காலை பின்வைக்காத குணாதியம் கொண்ட மிகவும் தன்னம்பிக்கையுடை பலாபலன்களை இந்த ஜாதகம் கொண்டுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்~வினால் வழங்கப்பட்ட ஏனைய இரண்டு ஜாதகங்களின் பலன்களும் உச்சத்தில் இருப்பதாக தேரர் தெரிவித்ததாகவும், பலம் உச்சத்தில் உள்ள சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ இவ்வாறு திடீர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஏனைய இருவரின் நிலை என்னவாகப் போகின்றதோ எனத் தெரியாதுள்ளதாகவும் தகவலளித்துள்ள அந்த அமைச்சர் தமது சகாக்களிடம் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment